Wednesday, July 27, 2011

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரியின் உண்மை வரலாறு.

இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் அசைக்க‌ முடியாத‌ அப்ப‌ட்ட‌மான‌ , ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு.

"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு

இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்

உண்மை விளங்கும்.

அடியில் கண்ட படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி பெரிதாகா விட்டால் மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.

க‌ல்லூரி க‌ழக‌ ஸ்தாபக‌ம். வ‌ர‌லாறு. 12.9.1968 லிருந்து
பக்க‌ம் 1

அன்றைய கால கட்டத்தில் நமது இளையாங்குடி இராமநாதபுரம் மாவட்டத்துக்குள் உட்பட்டிருந்த நிலையில், இளையாங்குடி பரமக்குடி அதன் சுற்று வட்டத்தில் கல்லூரி ஒன்று அமைப்பதற்கான வாய்ப்பு ஒன்றை 1970 ஜூலைக்குள்ளாக கல்லூரி செயல் பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாநில அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து,

நம் ஊரில் நலத்தை கருத்தில் கொண்ட தன்னலம் பாராத கண்ணியவான்கள் இளையாங்குடியில் கல்லூரி உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 12. 9. 1968 இளையாங்குடி கல்லூரி கழகத்தை ஊதியம் பெறாத 14 கனவான்களை செயற்குழு உறுப்பினர்களாக கொண்டு உருவாக்கினார்கள்..

பக்க‌ம் 2

பக்க‌ம் 2 - பத்தி 3 ல்
கல்லூரி நிறுவுவதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது ஊருக்கு தெற்கில் பரமக்குடி ‍ ராஜசிங்கமங்களம் ரஸ்தாக்கள் இணையும் இடத்தில் நிலம் வாங்க முடிவு செய்யப்படுகிறது.

( மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, இளையாங்குடி ‍பரமக்குடி மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, "இளையான்குடி கல்லூரி கழகம் இனாமாக எழுதிக் கொடுத்தனால் இன்று Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு முகப்பு இளையாங்குடி ‍ பரமக்குடி மெயின் ரோட்டில் சிறப்பான இடத்தில் அமையப்பெற்றுள்ளது. )

பக்க‌ம் 3
ஊழியர் நிய‌ம‌ன‌ம்.


பக்கம் 3 ‍ பத்தி 4 ல்
செயற்குழுவினர் தமது சொந்த வேலைகளால் கல்லூரி வேலைக்கு போதிய கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளதால் கல்லூரி வேலையை பிரத்தியேகமாய்க் கவனிக்கவும் செயற்குழுவின் முடிவுகளை செயல்படுத்தவும் ஜனாப். அமீன் நயினார் ஹவுத் ஊதியம் பெற்று செயலாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வகையில் ஜனாப். அமீன் நயினார் ஹவுத் அவர்கள் கல்லூரி சம்பந்தப்பட்ட வகையில் முதல் ஊதியம் பெற்று செயலாற்றியவர் என்ற‌ பெருமை படைத்தவராகிறார்.

பக்க‌ம் 4

ஜனாப். அமீர் நயினார் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கல்லூரி கழகத்திற்கு நில தானம் பெற்றுத் தருகிறார்கள்.

பக்க‌ம் 5


வ‌ர‌வு செலவு க‌ண‌க்கு
பக்க‌ம் 6

க‌ல்லூரி க‌ழக‌ அர‌ம்ப‌ கால‌ அங்க‌த்தின‌ர்க‌ள்
பக்க‌ம் 7

பக்க‌ம் 8

பக்க‌ம் 9

பக்க‌ம் 10

பக்க‌ம் 11

பக்க‌ம் 12

பக்க‌ம் 13

PAGE 14

க‌ல்லூரிக்கு நில‌ம் வாங்க‌ ப‌ண‌ம் கொடுத்த‌வ‌ர்க‌ள்.
PAGE 15

PAGE 16

கல்லூரி மனைக்கு நில தானம் செய்தவர்கள்.
PAGE 17

க‌ல்லூரிக்கு நில‌ம் விற்ற‌வ‌ர்க‌ள்
PAGE 18

க‌ல்லூரிக்கு என்டோமென்ட் நில தானம் செய்தவர்கள்.
PAGE 19.

இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற‌ எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகி, 1968 ல் "இளையான்குடி கல்லூரி கழகம்" தொடங்கப்பட்டு,கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி பெற்றிருந்தும் ,

அத‌ற்காக‌ நில‌ தான‌ங்க‌ள் பெற்றிருந்தும்

நமது ஊருக்கு தெற்கில் பரமக்குடி ‍ ராஜசிங்கமங்களம் ரஸ்தாக்கள் இணையும் இடத்தில் கல்லூரி நிறுவுவதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தும்,

ஜூலை 1970 க்குள் க‌ல்லூரி தொட‌ங்க‌ப்ப‌ட்டு விட‌வேண்டும் என்ற அரசாங்க நிப‌ந்த‌னையை"இளையான்குடி கல்லூரி கழகம்", நம் ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல்,நிறைவேற்ற‌ முடியாத‌ நிலையில்

இதற்கும் மேலாக, நம் ஊரின் அப்பொழுது உள்ள இக்கட்டான நிலையை அறிந்து, நிதி வேண்டி 1.4.1970 ல் ஒருவர் நமக்காக ஓங்கி குரலெழுப்புகிறார்.. குரலெழுப்புவது யார்?

இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களை பற்றி தெரியாமலிருக்கலாம்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பிறந்த நாளை வருடாவருடம் தமிழக முதல்வர்கள் முன்னாள் முதல்வர்கள் சகல கட்சி தலைவர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் பல்வேறு சமுதாய மக்களும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அன்னாரின் அடக்கத்தலத்தில் மரியாதை செலுத்தி வருவது நாம் யாவரும் அறிந்ததே..

இந்திய‌ அரசாங்க‌மும் இம்மாமனித‌ரை கண்ணிய‌ப்ப‌டுத்தி தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தி இருக்கிறது...


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப்
அவர்களின் 39 வருடங்களுக்கு முன் அடித்த நோட்டீஸ் .
சிறிது கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டும்

முகப்பு


முதல் பக்கம்

இரண்டாம் பக்கம்



மூன்றாம் பக்கம்



நான்காம் பக்கம்

பல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் ,

விதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலையில்,

கைக்கெட்டிய‌து வாய்க்கெட்டாத‌ சூழ்நிலையில் த‌வித்து நிற்கும் பொழுது ,

உட‌னிருந்து நிலைமையை ந‌ன்குண‌ர்ந்த‌ மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்

தானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்து

மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr.சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, "இளையான்குடி கல்லூரி கழகம் இனாமாக எழுதிக் கொடுத்து

ஏப்ரல் 28 ல் அன்றைய மாநில கவர்னர் மேன்மை தங்கிய சர்தார் உஜ்ஜல் சிங் அவர்களை அழைத்து மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் கல்லூரிக்காக அடிக்கல் நாட்டி,

அச்சமயம் நன்றி பெருக்கால்

சில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு " வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி " என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டு.

அந்த இடத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக‌ யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும், உழைப்பிலும் குறிப்பிட்ட கால வரைக்குள் கல்லூரி தொட‌ங்க‌ க‌ட்டிட‌ம் க‌ட்டி கொடுத்து,

மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌(FOUNDER CORRESPONDENT) பொறுப்பேற்று,

Telegram from collector.

இளையாங்குடி க‌ல்லூரி க‌ழ‌க‌த்திற்கு வ‌ழ‌ங்க‌ப்பெற்ற‌ கால கெடுவுக்குள்

1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் அக்கட்டிடத்தை திறப்பு செய்து அதிலிருந்தே அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு இளையாங்குடி Dr. சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,

அல்ஹாஜ் V.M. பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் இளையாங்குடி Dr.சாகிர் உசேன் உசேன் கல்லூரி 5.7.1970ல் ஸ்தாபிக்கப்பட்டது.

Invitation

Kalvettu.


இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ (FOUNDER CORRESPONDENT) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே கல்லூரியின் முத‌ல்வ‌ர், பேராசிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஊழிய‌ர்க‌ளை தேர்வு செய்து பணியிலமர்த்தி,

Janab Ameerali appointment.

Salary receipt.



அன்றைய காலத்தில் முதல்வர் கேப்டன் அமீர் அலி அவர்கள் தன்னுடைய அலுவலகத்தில் ஹாஜி வி.எம்.பீர் முஹம்மது அவர்கள், அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய ஒரு பெரிய புகைபடத்தை மாட்டி அதன் கீழே தான் தன் இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார்கள்.

மேலும் அக்காலத்தே வேறு மற்ற யாருடைய புகைபடத்தையும் கல்லுரியின் எப்பகுதியிலும் கண்டதில்லை.

ஜூலை 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் Dr.சாகிர் உசேன் கல்லூரியை ஸ்தாபித்து தொடங்கி செயல் பட செய்தார்கள்..

அல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்கள் தான் "கல்லூரி தந்தை"
என்று சுட்டிக்காட்டிய ஒரு சில இணையதள வெளியீடுகளும், பின்னூட்டங்களும் பின் வருமாறு:

படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி பெரிதாகா விட்டால் மீன்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.




NIDUR INFO தமிழ் முஸ்லீம் அறிவியல் கலை கல்லூரிகள்.



அல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்களின் இல்லம்.

SIVAGANGAI ON LINE



IN MALAYA BURMA STAR




ITI VELLI VILA MALAR - IN ILY.ORG.




DR. MOHAMED ALI

www.ilayangudikural /A.E.Naina Mohamed Ambalam





க்ளிக் செய்து படிக்கவும்,
.

No comments:

Post a Comment